Skip to main content

Posts

சில சிந்தனைகள்

 கடந்த சில வருடங்களாக மொழிப்பற்று, இனப்பற்று, மதப்பற்று, மண் பற்று ஆகியவை அரசியலின் மைய புள்ளியாக மாறி வருவதை காணமுடிகிறது. ஆனால், உள்ளார்ந்து பார்க்கும் போது மேற்பரப்பில் உள்ள கருத்துக்களை அதுவும் உதட்டு அளவில் பின்பற்றி வருகிறோம். ஏனெனில் நம் வாழ்க்கை முறை இன்று முற்றிலும் மேற்கத்திய முறையில் தான் அமைந்து இருக்கின்றது பெயரளவில் மட்டுமே நாம் இந்தியர்கள், தமிழர்கள். 5000ஆம் ஆண்டு தொன்மையான நம் கலாசாரத்தின் அடிச்சுவடே அறம், பொருள், இன்பம், வீடு (தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்) என்று வாழ்க்கையை நான்கு பகுதிகளாக பிரித்து வாழ்வது தான், ஆனால் இன்று மேற்கத்திய கலாசாரத்தின் கவர்ச்சி காரணமாக நாம் மரணத்தின் வாயில் வரை இன்பத்தை தேடுவதை வழக்கமாக கொண்டுள்ளமே தவிர வீடு அல்லது மோட்சம் என்பதையே ஆராய்வதில்லை. வேதங்களை வரிசைப்படுத்தும் போது இறுதியாக ஞானத்தின் வாயிலான உபநிஷத்துகளை வைத்தனர், ஆனால் ஏனோ இன்று பொருளாசையிலே வாழ்க்கை முடிந்து விடுகிறது. நம் உண்மையில் நம் தொன்மையான கலாசாரத்தை ஒன்றி வாழ்ந்தால் இன்று அதிக இயற்கை வள சுரண்டல் போன்றவை ஏற்படாமல் பூமியும் சமநிலையோடு இருக்கும். ஏறக்குறைய பதினைந்து ஆ
Recent posts

அன்பே சிவம்

 இறைவனின் அருள் கிட்டுவதற்கு மிகப் சுலபமான கருவி அன்பு மட்டுமே, ஞானம் பெருவதற்கு அறிவு சில சமயங்களில் தடையாக இருக்கிறது, இதையே மாணிக்கவாசகர் "கல்வி எனும் பல்கடல் பிழைத்தும்" என்று குறிப்பிடுகிறார். கண்ணப்ப நாயனார், சிவலிங்கத்தின் கண்களில் இருந்து இரத்தம் வழிவதை பார்த்தவுடன் தன் பார்வை போய்விடும் என்றும் சிறிதும் கவலைப்படாமல் தன் கண்ணை அப்பினார், இதை விட உயர்வாக இரண்டாவது  கண்ணிலிருந்து இரத்தம் வடிந்தவுடன் தன் காலை சிவலிங்கத்தின் மீது அடையாளமாக வைத்து இரண்டாவது கண்ணையும் பிடுங்க துணிந்தார் அந்த கணத்திலயே சிவபெருமான் தோன்றி அவருக்கு அருள் புரிந்தார்.   இதைப்போலவே, மனித உணவு தான் வேண்டும் என்று சிவனடியார் வடிவில் வந்த பெருமான் கேட்க தான் பெற்ற மகனையே வெட்டி சமைத்து கொடுத்தார் சிறுதொண்ட நாயனார், அவர் அன்பில் மகிழ்ந்த பெருமான் நாயனாரின் மகனை மீட்டு கொடுத்தார்.

ப்ராப்தம்

 நாம் சாலையில் பயணிக்கும் போது, நம்மை சில வாகனங்கள் முந்தி செல்கிறோம், நாம் சில வாகனங்களை முந்தி செல்கிறோம். இதில் வாகனோட்டியின் திறமை ஒரு எல்லை வரையே உள்ளது, ஓட்டும் வாகனத்தின் தன்மையிலேயே மீதி பகுதி உள்ளது. நாம் கடந்த செல்லும் வாகனங்களை ஏளனமாக பார்ப்பதும், நம்மை கடந்து செல்லும் வாகனங்களை ஏக்கத்துடன் பார்ப்பதும் பயனற்ற செயலே. ஏனெனில், சில வாகனங்களின் குறைந்தபட்ச வேகம், மற்ற சில வாகனங்களின் அதிகபட்ச வேகமாக இருக்கலாம், சில வாகனங்களின் அதிகபட்ச வேகம், சில வாகனங்களின் குறைந்தபட்ச வேகமாக இருக்கலாம். இதையே நம் முன்னோர்கள் இவ்வாழ்வில் நமக்கு என்னவெல்லாம் கிடைக்க வேண்டும் என்பதை இறைவன் நமக்கு விதித்த ப்ராப்த கர்ம்மமே தீர்மானிக்கிறது என்று தெளிவாக குறிப்பட்டுள்ளனர். இந்த ப்ராப்த்தத்தை நாம் முழு மனதுடன் ஏற்கும் போது மனதிற்கு எல்லை இல்லா அமைதி கிடைக்கிறது.

Embracing AI

 Today, there is more discussion all over the world about the rapid evolution of AI especially among the middle age group. Some people are scary of it and some people want to embrace it. There is a famous saying, "Everybody wants change, but no one wants to change". Wondering when the use of calculators and slowly computers were evolving, most certainly people would have spoken about them also in the same tone. It might take away jobs so and so, it is the next big thing. If we look back in hindsight, the calculators and computers have increased human productivity, only thing it has made the human brains dull in certain ways. Though it might have replaced certain jobs, but if we take a simple use case the billing is still done by a human, the calculators and computers enable to it more accurately and efficiently. Similarly, AI could also be a great enabler for humanity, the relativity of human dependence might come down in some areas, but it should go up in other areas to make

உலக பூமி தினம்

 "மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை, மனிதன் மீது மண்ணுக்கு ஆசை"  மண்ணிலிருந்து வந்த மனிதன் மண்ணிற்கு தன்னை திருப்பி தருகிறான். மண் உயிரோட்டம் கொண்டது அதில் விளையும் பொருட்கள் உயிர்சக்தியை தருகின்றது. பூமியின் புனித தன்மை உணர்ந்த ஞானியர் பலர் இந்த புனிதபூமியில் காலணி கூட அணியாமல் வாழ்ந்து உள்ளனர். ஆனால், நவீன நாகரத்தின் தேவைகளுக்காக பூமியை சுரண்டி, பூமியின் வளங்களை சுரண்டி நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம்.  காலத்திற்கு எதிராக நாம் செயல்படுத்த முடியாது, ஆனால் உண்மையை உணர மறுக்க கூடாது. பின்குறிப்பு -> சிந்தனை தெளிவின் குறைவு காரணமாக கருத்தியில் ரீதியான பதிவுகளை குறைத்து கொண்டு வருகிறோம்.

EV Push

 The push for EV's is not only limited to environment related impacts, but mainly also on economical and political ecosystem on crude. Today, almost all countries except a few import majority of the crude, which is their primary import.  If EV's replace ICE combustion if atleast by 60% in the next 10 years that will be a major change to this ecosystem, based on the battery raw material requirements that the vehicles depend, today much of it depends on lithium ion. Also, most countries are self reliant on electricity. Hence the transition to EV's is not only limited to environment related but far more consequences, so the transition will be closely controlled by entities that dominate Crude.

காதல்

 சமீப காலமாக நாம் எந்த தலைப்பை பற்றியும் பெரிதாக எழுதவில்லை. காதலர் தினம் நெருங்கி வருவதால் காதல் பற்றி எழுதலாம் என்ற நினைப்பு. தனிப்பட்ட முறையில் தினங்களை அனுசரிப்பது நம் வழக்கம் இல்லாவிட்டாலும் தலைப்பிற்கு அது பயன்படுகிறது. வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ரசித்து வாழ வேண்டியது, வருடத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டும் நாம் அனுசரிப்பது என்பது, பத்து நாட்கள் ஏதும் சாப்பிடாமல், ஒரே நாளில் நாற்பது இட்லி சாப்பிட முயற்சிப்பது போல. நாட்களை வணிக மயமாக்கவே இது போன்ற யுத்திகள் பயன்படுத்த படுவதாக நம்  எண்ணம். சரி தலைப்பிற்குள் நுழைவோம். நம் முகநூல் பக்கத்தில் அதிகம் எழுதபடாத ஒரு தலைப்பு. காதல் என்பது இளைஞர்களின் விருப்பமான வார்த்தையாக உள்ளது. காதல் என்ற உடனே சினிமா காட்சிகளும், பாடல்களும் பிரதானமாக நினைவிற்கு வரும் அளவிற்கு அவை ஊடுருவி இருக்கின்றன. காதல் எனும் உணர்ச்சி உயிர் இனங்கள் தோன்றிய முதலே உள்ள உணர்ச்சி, ஆனால் திரையில் நாம் காதலை காணுவது என்பது அதிகபட்சம் 100 ஆண்டுகளுக்கு உள்ளாக தான் இருக்க முடியும். இதை நாம் அழுத்தமாக குறிப்பிட வேண்டியதற்கான காரணம், காதல் எனும் உணர்ச்சியை நாம் முழுமையாக உணர தொடங்