Skip to main content

Posts

Showing posts from August, 2022

அமைதி

 எழுத்துச்சித்தர் பாலகுமாரன் ஐயாவின் சில வார்தைகளை கடன் வாங்கி இங்கே எழுதிகிறோம். "பேசும் போது நம் எண்ணங்கள் சிதறும், ஆகையால் மனம் கூச்சல் இடுகின்றது, அதுவே எழுதும் போது எண்ணங்கள் ஓரளவுக்கு மேல் குவிகின்றது" மெளனத்திலே எண்ணங்கள் உதயமாவது அற்றுபோகின்றது. ஒரு நாள் நம்மால் மெளனவிரதம் இருக்கமுடியுமா?! மெளனத்தை மனம் முயற்சிக்கும் போது தான், அது அளவில்லாமல் அலைபாய்கின்றது. சோடா பாட்டிலை நாம் திறக்கும் போது எவ்வாறு காற்று பீறிட்டு வருகின்றதோ, அது போல் நாம் மெளனமாக இருக்க முயற்சிக்கும் போது மனம் அதிகம் உத்வேகம் அடைகின்றது.  சும்மாவா சொன்னார் அருணகிரிநாதர், 'சும்மாஇரு சொல்அற என்றலுமே, அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே' என்று. இந்த ஆழ்அமைதியே உண்மையான மெளனம், இது கிட்டுவதற்கு இறைவனின் கருணை இருப்பின் மனதை உற்று நோக்கியா அல்லது மனம் அவன் அருளால் தானாக அடங்கி ஒடுங்கிவிடுவதை அன்றி வேறேதும் வழி இருப்பதாக தொன்றவில்லை. "வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்தன் சிந்தை தெளிவித்து" ~விநாயகர் அகவல் "விலங்கு மனத்தால் விமலா உனக்கு கசிந்து உள்உருகி நலந்தான் இலாத சிறியேற்கு

ஓர் நன்றி பதிவு

 கடந்த சில காலமாக நாம் அரசியல் சார்ந்த பதிவுகளை போடுவதில்லை, கிருஷ்ணாஜியின் தாக்கத்தால், ஏனெனில் அரசியல் ஒரு எல்லைக்கு மேல் மக்களை பிரித்து ஆளவே பயன்படுகிறது ஒவ்வொரு இயக்கத்தாலும் தங்களுக்கு ஏற்றாற் போல். வலது என்றால் இடது முளைக்கும், இடது என்றால் வலது முளைக்கும். மனிதர்கள் முழுமையாக ஒன்றினைய அனைத்து அடையாளங்களையும் துறந்தால் மட்டுமே சாத்தியம். இருப்பினும் 75வது சுதந்திர தினத்தின் நினைவாக பெரும் பகுதியினரிடம் இருந்து மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட  ஒரு பிரதமருக்கான நன்றியுரையாக இப்பதிவினை தொடர்கிறோம். இவருக்கு முன்னால் இரண்டு ஆண்டுகளில் இரண்டு ஆட்சிகள், இவருக்கு பின்னால் நான்காண்டுகளில் நான்கு ஆட்சிகள், நடுவில் இவருடைய ஐந்தாண்டு ஆட்சி. இது அந்த காலகட்டத்தில் இருந்த நிலையற்ற அரசியல் தன்மையையும், அவரின் அரசியல் சாதுர்யத்தையும் காட்டுகின்றது. இவர் பிரதமராக பதவி ஏற்ற போது இன்று ஏறக்குறைய இலங்கையில் இருக்கும் பொருளாதார சூழல் போன்றது, நாடு அன்று மிகவும் நெருக்கமாக இருந்த சோவியத் யூனியன் விழுந்த தருணம், வளைகுடா யுத்தம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம், கட்சியின் தலைவர் திடீர் மறை